தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இதுவரை 78 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.