விரைவில் வெளியேற போவதில்லை : ஈரான் உடனான போரில் வெற்றி பெற்று விட்டதாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆனால் போரில் இருந்து விரைவில் வெளியேற விரும்பவில்லை எனவும் கூறுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் Kentucky மாநிலத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக கூறினார். ஈரானின் படைகளை கணிசமாக சீரழித்ததாகவும், 58 கப்பல்களை வீழ்த்தியதாகவும் அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டார். Related Link அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ஈரான்?