சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்வதற்கான திட்ட அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக விதிகள் அடிப்படையில் இல்லை என்பதால், புதுப்பித்து சமர்ப்பிக்கும் படி உத்தரவிடப்பட்டது.