Also Watch
Read this
By: Web Team

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் நடப்பாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்கூட்டியே அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணபலன்கள் பெறலாம் என அரசு கூறியுள்ளது. இதன் மூலம், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், ஆண்டுக்கு 3ஆயிரத்து 562கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved