தமிழகத் தொடர்வண்டித் திட்டங்களுக்கான நிதியில் 728 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவது தமிழகத்திற்கு செய்யப்படும் துரோகம் என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 22 ரயில் பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதியை பாமக வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு மாறாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை திருப்பி அனுப்பி அதனை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு செயல்பட்டால் 20 ஆண்டுகள் ஆனாலும் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.