மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி குஜராத் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தால், மும்பை அணியின் கேப்டனுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.இதேபோல் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற மும்பை வீரர்கள் மற்றும் இம்பேக்ட் வீரருக்கு 6 லட்சம் ரூபாய் அல்லது போட்டியில் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.