ஓபன் டென்னிஸ் தொடர் : துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காஃப், ஜெசிகா பெகுலா அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காஃப் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். Related Link 49ஆண்டுக்கு பிறகு சாதித்த அரசுப்பள்ளி