ஐபிஎல் தொடரில் பெங்களுரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாலை 6 மணியில் இருந்தே மழையின் வேகம் விட்டு, விட்டு அதிகரித்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனையடுத்து மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் இரவு 10.30 மணியளவில் இந்த ஆட்டம் டாஸ் கூட சுண்டப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.