Also Watch
Read this
Posted on: Dec 07, 2025 10:23 AM
By: Web Team

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-க்கு 1 என்ற கணக்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த 3-ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா, 47 புள்ளி 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 39 புள்ளி 5 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved