Also Watch
Read this
By: Web Team

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா திமுக ஆட்சியில் திறக்கப்பட்டும் செயல்படாமல் இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இபிஎஸ் கலந்துரையாடினார்.
அப்போது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட அவர், அனைத்து கோரிக்கைகளும் தேர்தல் வெற்றிக்கு பின் நிறைவேற்றப்படும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved