ராமதாஸ்-அன்புமணி இடையே முக்கால் மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பதில் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாமக தலைவர் பதவி தொடர்பான கேள்விக்கு சுற்றி வளைத்து மழுப்பலாக பதில் அளித்தார்.