“வர்ணாசிரமத்தைத் உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், பேசிய அமித்ஷா, தேசியக் கல்விக் கொள்கை, சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார். இதற்கு எக்ஸ் வலைதளத்தில் பதில் அளித்துள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” என்று விமர்சித்துள்ளார்.