கனிமொழி எதிர்ப்பு : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கும் பாஜக நிர்வாகி செந்தில்நாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொதுவாழ்வில் உள்ள பெண்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற நாகரிகமற்ற ஆபாச தாக்குதல்களை ஒழித்துக்கட்டாமல், அரசியலில் மட்டுமல்ல பொதுச் சமூகமாகக் கூட பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியாது என குறிப்பிட்டுள்ளார். Related Link செல்வாக்கு இல்லாத செல்வப்பெருந்தகை