Also Watch
Read this
Posted on: Oct 28, 2025 06:36 AM
By: Web Team

வரும் சட்டமன்ற தேர்தலில், தோல்வி பயம் அறிந்தவுடன் இப்போதே அதற்கான காரணங்களை தேடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது தவறுகளை திருத்திக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். இரட்டை வாக்குகள், இறந்தவர் வாக்குகள், முகவரி மாற்றம் போன்ற குளறுபடிகளை சரி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக வரவேற்பதாக ஜெயக்குமார் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த பணிகளை எல்லாம் மாநில அரசின் கீழ் உள்ள அதிகாரிகள் தான் செய்யப் போகிறார்கள் என்பதால், தேர்தல் ஆணையம், அதிகாரிகள் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved