இந்தியா சீன எல்லைச் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ராணுவ உறவை வலுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீன ராணுவம் தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் முழுமையான படை விலக்கல் தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் சீன ராணுவம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன.