புத்தாண்டை பிறந்ததையடுத்து வேளாங்கண்ணி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மலர்ந்துள்ள 2025ம் ஆண்டு செவ்வனே அமைய வேண்டும் என கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்ததுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சில ஆலயங்களில் மக்கள் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.