மௌனம் பேசியதே’ ரீ-ரிலீஸ்: தனது சினிமா பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து நடிகை திரிஷா நெகிழ்ச்சிநடிகையாக பெரிய அடையாளத்தை கொடுத்த முதல் படம்நடிகை திரிஷா தனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்த 'மௌனம் பேசியதே' படத்தை பற்றி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். 2002ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அவருக்கு நடிகையாக பெரிய அடையாளத்தை கொடுத்த முதல் முக்கிய படமாக அமைந்தது.'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, 'மௌனம் பேசியதே' திரைப்படம் வரும் பிப்ரவரி 13, 2026 அன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நடிகை திரிஷா இந்த படம் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என பகிர்ந்துள்ளார்.மறக்க முடியாத அனுபவம்அவர் கூறுகையில், தனது முதல் படமான 'மௌனம் பேசியதே' தான் தனது கேரியரின் தொடக்கம் என்றும், தயாரிப்பாளர் கணேஷ், இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். கருத்துகளை பகிர வேண்டுமென அன்பு கோரிக்கைமேலும், தனது முதல் படமும் தற்போது நடித்து வரும் புதிய படமும் சூர்யாவுடன் இருப்பது ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்த உணர்வை தருகிறது என்றும் கூறியுள்ளார். ரசிகர்கள் படத்தை பார்த்த பின் தன்னிடம் கருத்துகளை பகிர வேண்டுமெனவும் அவர் அன்புடன் கேட்டுக் கொண்டார்.திரையுலக பயணத்திற்கு வலுவான அடித்தளம் 'மௌனம் பேசியதே' படம் திரிஷாவின் திரையுலக பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்து, இந்திய சினிமாவில் அவர் நீண்ட காலம் வெற்றிகரமாக பயணிக்க வழிவகுத்த முக்கியமான படமாக கருதப்படுகிறது. Related Link இன்று தங்கம் விக்கிற விலைக்கு...