Also Watch
Read this
By: Web Team

இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இருவரும் டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவே இவர்கள் விளையாடும் கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.
2027 உலக கோப்பையில் இவர்கள் விளையாட நினைத்தால், அதற்கு முன்னதாக வரும் டிசம்பரில் நடக்க உள்ள விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் விளையாட வேண்டியிருக்கும் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved