கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையொட்டி தேவாலயத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தேவாலயத்தில் குவிந்த மக்கள் பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.