குஜராத்தில் விமான விபத்து ஏற்பட்ட இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லுவார் என கூறப்படுகிறது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.