வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. குடியாத்தம் நகரம், மேல் ஆலத்தூர், கொண்டசமுத்திரம், பேர்ணாம்பட்டு, சேம்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.