மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ், கடந்த திங்கட்கிழமையன்று உயிரிழந்தார். இந்நிலையில், வாடிகன் சிட்டிக்கு சென்ற இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.