Also Watch
Read this
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 14ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் தலைமையில்...
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் வியாழக்கிழமை மே 14ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது மாவட்டச் செயலாளர்கள அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் கூறி உள்ளார்.

தேர்தல் தோல்வி, ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்களும் தோல்வி அடைந்தனர். எனவே, தற்போது நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய விதம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved