அமெரிக்காவில் முன்மொழியப்பட்ட குடியுரிமைக்கான சட்டத்தை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மெக்சிகோவில் டிஜுவானாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பேரணியாக வந்து, மெக்சிகோ - அமெரிக்க எல்லை சுவரில் டிரம்புக்கு எதிரான போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 2ஆவது முறையாக டிரம்ப் நிர்வாகத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.