Also Watch
Read this
Posted on: Oct 16, 2025 07:20 AM
By: Web Team

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்ததால், உழவர் பெருமக்கள் கவலை அடைந்துள்ளனர். உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, உத்தமபாளையம், கலுமேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் 10 ஏக்கரிலான நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் நிலவிய கடும் பனிமூட்டம்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இரவு முழுவதும் தொடர் சாரல் மழை பெய்த நிலையில் காலையில் கடும் பனி மூட்டம் நிலவியது. கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடும் பனி பொழிந்தது.
மலைச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved