தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. வழக்கமாக நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னரே, ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கும் நிலையில், கால தாமதத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண்களை குறிப்பிடாமலேயே விண்ணப்பிக்கலாம் என்றும், அந்த மதிப்பெண்கள் நேரடியாக NTA இணைய தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுக்கு பின் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.