திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவில் மலையப்ப சுவாமி தங்க சூரிய பிரபை வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 7 ஆம் நாள் விழா நடைபெற்றது. அப்போது தங்க சூரிய பிரபை வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.