ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கோட்லிபரன் கிராமத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், உடல் வலி, கடும் வயிற்றுப்போக்கு போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் அடுத்தடுத்த நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.