கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருவனந்தபுரம் அருகே பள்ளிகள் அமைந்துள்ள சாலையில், வளைவில் முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.