Also Watch
Read this
By: Web Team

பஹல்காம் தாக்குதலில் மத்திய பாஜக கூட்டணி அரசின் தோல்வி, பீகாரில் நடத்தப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த திட்டம் உள்ளிட்டற்றை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடிய வேகத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஆர்ஜேடி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்பிகளும் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பீகாரில் நடப்பது ஜனநாயக படுகொலை என கூறும் பதாகைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சி எம்பிகளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட அவைகள் நண்பகலில் மீண்டும் கூடியது. அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதியில் திரண்டு பதாகைகளை ஏந்தியவாறு அமளி நீடித்த தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved