Also Watch
Read this
By: Web Team

ஆதார் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு சரியானதே என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது ஆதார் அட்டையை குடியுரிமைக்கான இறுதியான ஆதாரம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறுவது சரியானதே என நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். அதை ஒரு செல்லத்தக்க ஆதாரமாக ஏற்கும் முன்னர் உரிய சரிபார்த்தல் அவசியம் என அவர் கூறினார்.
அதே நேரம் வாக்காளர்கள் சரிபார்த்தல் நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved