Also Watch
Read this
By: Web Team

மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதா மூலம் மன்னர் யாரை வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யக்கூடிய பழங்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்கிறோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படும் சட்டமசோதா குறித்து மக்களவையில் பேசிய அவர், பாஜகவினருக்கு ஒருவரின் முகம் பிடிக்கவில்லை என்றால் அமலாக்கத்துறையிடம் கூறி ஒரு வழக்கு போடச் சொல்வார்கள் என்றும், பின்னர் மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிரதிநிதியின் பதவி 30 நாட்களுக்குள் பறிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார் எனவும் கூறியுள்ளார்.
இது நீதித்துறையின் சுதந்திரத்தை மீறுவதாகும் எனவும், அதிகாரமே நீதியை ஆளும் சூழ்நிலை உருவாகும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved