மகத்தான தலைவர் ஜெயலலிதா : மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாராம் சூட்டியுள்ளார். தமது மாதாந்திர வானொலி உரையான மன் கி பாத்தில் இப்படி கூறிய மோடி, பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்றார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறியவர் அவரது சேவை என்றும் தன் நினைவில் இருக்கும் என தமிழில் கூறினார். பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், மோடி ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. Related Link டெல்லியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை