உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முதலீடுகள், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியை அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முன்பு போக்குவரத்து குறைவாக இருந்த பகுதிகளும் தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். டிஜிட்டல் வளர்ச்சி, நிதிப்பகிர்வு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை இந்தியாவின் அடித்தளத்தை மாற்றியமைத்து வருவதாகவும் அவர் கூறினார். Related Link பழனி முருகன் திருக்கோயில் தைப்பூசத்திருவிழா