முஸ்லிம் ஆண்களுடன் உங்கள் மகள்கள் பழகினால் அவர்கள் கால்களை உடையுங்கள் என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், ஹிந்து பெண்களும், சிறுமிகளும் முஸ்லிம் ஆண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் எனவும், அந்த ஆண்களை தங்கள் வீடுகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் சிறு பராமரிப்பு பணிகளுக்கும்கூட எந்தவொரு முஸ்லிம் நபரையும் வீடுகளுக்குள் அனுமதிக்க கூடாது என பேசியுள்ளார்.