ராஜஸ்தான் மாநிலம் சுருவில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்களைச் சமாளிக்க மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் மற்றும் பொது இடங்களில் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் பசுமை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.