Also Watch
Read this
By: Web Team

மேற்கு வங்க மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜல்பைகுரி மாவட்டத்தின் ராஜ்கன்ஜ் பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு, 15 வயதான மாணவியை கடத்தி மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.
உடலை கழிவு நீர் தொட்டியில் போட்டு மறைத்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு, ஆட் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, ஆதாரத்தை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved