Also Watch
Read this
Posted on: May 24, 2025 09:48 AM
By: Srini Vasan

டெல்லியில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, நகரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை வசதிகள், மருந்துக்கள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved