Also Watch
Read this
By: Web Team

தொழில் நுட்ப கோளாறால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டனின் F-35 போர் விமானத்தை சரி செய்ய அந்நாட்டு வான் படை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு வந்தனர்.
ஜூன் 14 ம் தேதி பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான இந்த விலை மதிப்பு மிக்க அதி நவீன போர் விமானம் எரிபொருள் தீர்ந்து விட்டதாக கூறி திருவனந்தபுரத்தில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் விமான ஹைட்ராலிக் நுட்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பிரட்டனுக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளது.
விமானத்தை பாகங்களாக பிரித்து சி-17 குளோப்ஸ்டர் விமானம் மூலம் பிரிட்டன் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் விமானம் ஒரு ஹேங்கருக்கு இழுத்துச் செல்லப்பட்டது..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved