தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் BMW கார் வாங்கித் தராததால், இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சாட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஜானி, தனது தந்தை கனகய்யாவிடம் BMW கார் வாங்கித் தர கேட்டுள்ளார். பொருளாதார சூழ்நிலை காரணமாக BMW கார் வாங்க முடியாது என்றும், ஸ்விஃப்ட் கார் வாங்கித் தருவதாகவும் தந்தை கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஜானி, பூச்சி மருந்து குடித்துள்ளார்.