திரிவேணி சங்கமத்தில் நீராடல் : உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மாக் மேளா திருவிழாவில், மகா சிவராத்திரியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக கூறப்படுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அதிகாலை முதல் திரண்டு வந்து, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடினர். பெரும் கூட்டம் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாக் மேளா அதிகாரிகள் தெரிவித்தனர். Related Link மெட்ரோ ரயில் பாலம் ஸ்லாப் இடிந்து விழுந்த விவகாரம்