பெரும் தீவிபத்து : டெல்லியின் ரோகிணி ரிதாலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமியின் கருகிய உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பலாயின. 15 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் பல மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, கருகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடல் மீட்டதுடன் காயமடைந்து கிடந்த மற்றொரு குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். Related Link நேபாளத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்