Also Watch
Read this
By: Fyrose Banu

கழுகுமலை கோயில் தேரோட்டத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கவும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் காந்தி மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழுகாசலச்மூர்த்தி திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தைப்பூச தேர் திருவிழா நடைபெற்றது. பரம்பரையாக தேர் சக்கரங்களுக்கு சருக்கு கட்டை வைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளி சப்பானிமுத்து தேர் சக்கரங்களுக்கு சருக்கு கட்டை வைக்கும் போது தேர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சப்பானிமுத்து குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் கோயில் தரப்பில் இழப்பீடாக மூன்று லட்சம் ரூபய் தருவதாக கூறியுள்ளனர் ஆனால் இன்று வரை கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எந்த இழப்பீடும் வழங்கவில்லை.

இழப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் தரக்கோரிக்கை
கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் சப்பானி முத்துவின் இறப்பை மூடி மறைப்பதாகவும், உதாசீனப்படுத்ததாகவும் குமுறிய உறவினர்கள் தமிழக அரசு உடனடியாக சப்பானி முத்துவின் இறப்பிற்கு நியாயமான இழப்பீடு வழங்க கோரிக்கைகள் விடுத்துள்ளனர். உரிய இழப்பீடும் அரசு வேலையும் கிடைக்கும் வரை தமிழக அரசை விடமாட்டோம் எனவும் மேலும் சப்பானிமுத்துவின் குடும்பத்திற்கு கோயில் நிர்வாகமும், தமிழக அரசும் இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்கவும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved