நீலகிரி மாவட்டம் கூடலூரில் பலாப்பழம் தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை பொதுமக்கள் டார்ச் லைட் அடித்து வேடிக்கைப் பார்த்தனர். தேவர்சாலை பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டமேடு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் பலாப்பழம் உண்பதற்காக ஊருக்குள் நுழைந்தன. உடனடியாக அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.