நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு வாரமாக முகாமிட்டு தோட்டங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை வனத்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். குனில் வயல், புத்தூர் வயல் மற்றும் தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானை கூட்டம் தோட்டங்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பாதுகாப்பாக விரட்டினர்.