Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வீரக்கல், வீ.கூத்தம்பட்டி, எஸ்.பாறைப்பட்டி உள்பட பல கிராமங்களில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்துவதால், வயல்களை சுற்றி சேலைகளை கட்டி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் வயல்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதாக தெரிவித்த விவசாயிகள், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved