விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்க வேண்டிய தாட்கோ வணிக வளாக கடைகளை அரசு வழங்காததால் கடைகளின் பூட்டை உடைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.