Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில், கிராம நிர்வாக அலுவலரின் மனைவியும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலை கிராம வி.ஏ.ஓ முருகன், குடும்பத்துடன் காரில் சென்ற போது, கோட்டையூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் முருகனின் மனைவி ரேணுகா தேவி, மூத்த மகள் மதிவதனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வி.ஏ.ஓ முருகனும், இளைய மகளும் படுகாயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved