திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாட்டுச்சந்தையில் பைக்குகளை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வாணியம்பாடியில் மாட்டுச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை திருடி செல்ல முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து, சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்த நிலையில் இருவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தாமோதரன் என்பது தெரியவந்துள்ளது.