Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வெறிநாய் கடித்ததில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரை கிராமத்தில் நேற்று இரவும், இன்று காலையிலும் பொதுமக்களை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்தது.
இதில், பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வெறிநாயை பிடிக்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved